ஷஹீட் அஃப்ரிடி மற்றும் மொஹமட் ஷிராஸின் அணி இன்று LPL போட்டிகளிலிருந்து வெளியேறுமா? தீர்மானமிக்க போட்டி இன்று!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஷஹீட் அஃப்ரிடி மற்றும் மொஹமட் ஷிராஸின் அணி இன்று LPL போட்டிகளிலிருந்து வெளியேறுமா? தீர்மானமிக்க போட்டி இன்று!

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் மேலும் இரண்டு போட்டிகள் இன்று ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெறவிருக்கின்றன. திசர பெரேராவின் ஜெப்னா ஸ்டாலியன்ஸுக்கும், தசுன் ஷானகவின் தம்புல்ல வைக்கிங்ஸுக்கும் இடையே இன்று மாலை 3.30 மணிக்கு போட்டி தொடங்கவுள்ளது.

இன்றைய இரண்டாவது போட்டி குசல் ஜனித் தலைமையிலான கண்டி டஸ்கர்ஸ் மற்றும் ஷஹீட் அஃப்ரிடி தலைமையிலான கோல் கிளாடியேட்டர்ஸ் இடையே இன்று இரவு 8 மணிக்கு போட்டி நடைபெறவுள்ளது.


$ads={2}

இதற்கிடையில், தம்புல்ல வைக்கிங்ஸ் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ஓஷத பர்ணாண்டோ ஒரு வாரம் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அண்மையில் கண்டி டஸ்கர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் 10 ஓட்டங்களை பெற்றபோது காலில் உபாதை ஏற்பட்டது. இதனால், அவர் களத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.

இந்த காயம் காரணமாக ஓஷத பர்ணாண்டோ லங்கா பூரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் அடுத்த சில போட்டிகளில் விளையாட முடியாதுள்ளது.

ஓஷத பர்ணாண்டோ காலியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்ததோடு காலி ஷாங்க்ரி லா ஹோட்டலில் ஓய்வு பெற்று வருகின்றார்.

இதற்கிடையில், கண்டி டஸ்கர்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்னும் இன்று இலங்கைக்கு வரவுள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.