லன்கன் ப்றீமியர் லீக் (LPL) போட்டித் தொடரில் கலந்துகொள்ள இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட மூவருக்கு கொரொனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
$ads={2}
கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மறைமுகமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.
அவர்கள் நேற்று இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட சமயம், அவர்களது கொரோனா தொற்றின் இரண்டாவது நாள் என கண்டறியப்பட்டது.
அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்ததும், தனியார் மருத்துவமனை ஒன்று இலங்கை கொரொனா தடுப்பு சுகாதார வழிகாட்டுதல்களை மீறி அவர்களை மருத்துவமனையில் தங்க வைத்துள்ளது.
இதில் பாகிஸ்தான் வீரர் ஒருவர், இந்திய வீரர் ஒருவர் மற்றும் இந்திய தொழில்நுட்ப அதிகாரி ஒருவருமே இவ்வாறு கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் அவர்கள் சுகாதார வழிகாட்டுதலின் பிரகாரம் மருத்துவமனையில் அனுமதிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.