கொரோனா தடுப்பூசி - இந்தியாவிடமிருந்து 30 மில்லியன் தடுப்பூசியை கொள்வனவு செய்யும் பங்களாதேஷ்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தடுப்பூசி - இந்தியாவிடமிருந்து 30 மில்லியன் தடுப்பூசியை கொள்வனவு செய்யும் பங்களாதேஷ்!

இந்தியாவிடமிருந்து 30 மில்லியன் COVID-19 தடுப்பூசிகளை வாங்கிக்கொள்ள பங்களாதேஷ் ஒப்பந்தம் செய்துள்ளது.

பிரிட்டனின் AstraZeneca நிறுவனம் தயாரித்து வரும் தடுப்பூசிகளை இந்தியாவின் Serum கல்விக்கழகமும் இணைந்து சோதித்து வருகிறது.

தற்போதைய நிலவரப்படி AstraZeneca நிறுவனத்தின் தடுப்பூசி நோய்த்தொற்றுக்கு எதிராக நல்ல பலனைக் கொடுத்துவருகிறது.

$ads={2}

தடுப்பூசிக்கு ஒப்புதல் கிடைத்தால் முதற்கட்டமாக Serum கல்விக் கழகத்திடமிருந்து 30 மில்லியன் COVID-19 தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளப்போவதாக பங்களாதேஷ் கூறியது.

இந்தியாவிடமிருந்து கிடைக்கும் தடுப்பூசிகளை, 28 நாளுக்கு ஒன்று வகையில் 15 மில்லியன் பேருக்கு இரண்டு முறை விநியோகிக்க முடியும் என்றும் அது தெரிவித்தது.

மேலும் தடுப்பூசிகள் வாங்க உலக வங்கியிடம் பங்களாதேஷ் நிதி உதவி கேட்டுள்ளது.

பங்களாதேஷில் COVID-19 நோய்த்தொற்று கட்டுக்கடங்காமல் பரவிவருகிறது.

தற்போது அங்கு 416,006 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. 6,021 பேர் இறந்துமுள்ளனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.