பொலிஸ் அதிகாரியை அறைந்த திரைப்பட நடிகர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொலிஸ் அதிகாரியை அறைந்த திரைப்பட நடிகர்!

சிங்கள திரைப்பட நடிகர் வில்சன் கருணாரட்ன, காவல்துறை அலுவலர் ஒருவரின் கன்னத்தில் அறைந்தமை காரணமாகவே கைது செய்யப்பட்டதாக காரணம் வெளியிடப்பட்டுள்ளது.

கிருலப்பனையில் வைத்து முகக்கவசம் அணியாமைக் காரணமாக அவர் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.


$ads={2}

இது குறித்து தகவல் அளித்துள்ள காவல்துறையின் பேச்சாளர் அஜித் ரோஹன, முகமூடி அணியாமை குறித்த காவல்துறை உறுப்பினர் நடிகரிடம் வினவியபோது அவர் காவல்துறை உறுப்பினரின் கன்னத்தில் அறைந்ததாக தெரிவித்தார்.

இதனையடுத்தே நடிகர் வில்சனை கைது செய்ததாக அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

இந்தநிலையில் நடிகரால் தாக்கப்பட்ட காவல்துறை உறுப்பினர் பின்னர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.