சர்ச்சைக்குள்ளாகிய ரிஷாத் பதியுதீன்; நீதிமன்ற வளாகம் வரை CiD பதுகாப்பு; பொலிஸ் தரப்பு விளக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சர்ச்சைக்குள்ளாகிய ரிஷாத் பதியுதீன்; நீதிமன்ற வளாகம் வரை CiD பதுகாப்பு; பொலிஸ் தரப்பு விளக்கம்!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுபோது, அவருக்கு விசாரணை அதிகாரிகளால் எந்த சிறப்பு சலுகைகளும் அளிக்கப்படவில்லை. அவரது பாதுகாப்பை உறுதி செய்யவே CIDயினர் நீதிமன்ற வளாகத்தில் நீதிவானின் உத்தியோகபூர்வ அறைக்கு அருகாமை வரை வாகனத்தில் அவரை அழைத்து வந்துள்ளதாகவும் CID பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த டி சொய்ஸா தெரிவித்தார்.


நீதிமன்ற உத்தர்வுக்கு அமைய நேற்று  (25) அவர் நீதிமன்றில் ஆஜராகி, விளக்கமளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


$ads={2}


எம்.பி ரிஷாத் பதியுதீனை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யும்போது, அவருக்கு சிறப்பு சலுகையளித்தமை தொடர்பில் எந்த விசாரணைகளையும் இதுவரை முன்னெடுக்காமை தொடர்பில் விளக்கம் கோரவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டிருந்தார்.


மேலும், இது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. CID பொறுப்பதிகாரி, விசாரணை அதிகாரிகளின் வாக்குமூலங்கள் பெறப்பட்டன. ஊடக நிறுவன காட்சிகளும் ஆராயப்பட்டன. இதன்போது, CIDயினர் முதலாவது சந்தேக நபரின் பாதுகாப்பை உறுதி செய்யவே இவ்வாறு நடந்துகொண்டுள்ளதாக தெரிய வந்தது." என அறிவித்தார். இது குறித்த விசாரணை அறிக்கையை மின்னஞ்சல் ஊடாக சமர்ப்பிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.