மக்களே அவதானம்! கொழும்பில் தீவிரமடையும் கொரோனா!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மக்களே அவதானம்! கொழும்பில் தீவிரமடையும் கொரோனா!!

கொரோனா வைரஸின் இரண்டாவது அலை ஆரம்பமானதிலிருந்து நேற்று வரை கொழும்பில் 2,496 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 90 பேர் கொழும்பு மாநகரசபையை சேர்ந்த ஊழியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கொரோனா தொற்றாளர்கள் கொழும்பு 1 முதல் 15 வரையான கொழும்பின் பகுதிகளில் பதிவாகியுள்ளதாக மாநகரசபை பிராந்திய தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் தினுகா குருகே தெரிவித்துள்ளார்.


$ads={2}

கொழும்பு வடக்கிலிருந்து 800 க்கும் மேற்பட்டோருக்கும், ஜிந்துப்பிட்டி பகுதியில் 500 க்கும் மேற்பட்டோருக்கும், பொரள்ளை பகுதியில் குறைந்தது 400 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாநகரசபையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் பெரும்பாலான ஊழியர்கள் பல்வேறு அத்தியாவசிய சேவை துறைகளுடன் தொடர்புடையவர்கள், சுகாதாரப் பிரிவு மற்றும் குப்பை சேகரிப்பு பிரிவைச் சேர்ந்தவர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.