கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 272 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் மூவர் தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் என்பதோடு, ஏனைய 269 பேரும் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பை பேணியவர்கள் எனவும் இராணுவத் தளபதி மேலும் குறிப்பிட்டார்.
இதற்கமைய மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொவிட் கொத்தணியில் இதுவரை பதிவான மொத்த கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 8,129 ஆக அதிகரித்துள்ளது.