இலங்கையில் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பில் அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்! -ரவூப் ஹக்கீம்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பில் அரசு துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்! -ரவூப் ஹக்கீம்

கொரோனா தொற்றினால் இறக்கும் முஸ்லிம் சடலங்களை புதைக்க அனுமதிப்பது தொடர்பில் அரசாங்கம் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

மருத்துவ கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய அவர்,

"அவசரப்படாமல் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டிய காலம் இது. இடர் முகாமைத்துவ தேசிய கவுன்சிலை உடனடியாக அமைத்து எதிரணிக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும்.

$ads={2}

நாடு பாரிய அனர்த்த நிலைக்கு முகங்கொடுத்துள்ளது. இறந்தவர்களை அடக்குவது தொடர்பான பிரச்சினை பாரதூரமான பிரச்சினையாக வளர்ந்துள்ளது. 

முஸ்லிம் மக்கள் மட்டுமன்றி கத்தோலிக்க மக்களுக்கும் இது தொடர்பில் பிரச்சினை உள்ளது. இதிலுள்ள விஞ்ஞானபூர்வமான அடிப்படையை உலக சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளது. அமைச்சர் அலி சப்ரி எடுத்து வரும் நடவடிக்கை தொடர்பாகவும் பிரதமர் அதற்கு அளித்து வரும் ஒத்துழைப்பும் பற்றி எமக்கு தகவல் கிடைத்துள்ளது.

இது தொடர்பில் அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.