ஜனாஸா நல்லடக்க விவகாரம்; இனவாத நோக்கிலேயே இதற்கான எதிர்ப்பு வெளியிடப்படுகிறது! வர்த்தமானியை ரத்து செய்து விஞ்ஞானபூர்வமான முடிவு எடுக்குமாறு கோரிக்கை! -ரவூப் ஹக்கீம்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாஸா நல்லடக்க விவகாரம்; இனவாத நோக்கிலேயே இதற்கான எதிர்ப்பு வெளியிடப்படுகிறது! வர்த்தமானியை ரத்து செய்து விஞ்ஞானபூர்வமான முடிவு எடுக்குமாறு கோரிக்கை! -ரவூப் ஹக்கீம்


ஜனாஸாக்களை தகனம் செய்வதற்கு மாத்திரம் அனுமதி வழங்குவது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை இரத்துச் செய்து விஞ்ஞான அடிப்படையில் தீர்மானம் மேற்கொள்ள வேண்டும் என தாழ்மையாக கேட்டுக் கொள்கின்றேன் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.


நாடாளுமன்றத்தில் இன்று (25) உரையாற்றிய அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 


கொரோனா தொற்றின் காரணமாக மரணிப்பவர்களின் சடலங்களை தகனம் செய்ய மாத்திரம் எடுத்துள்ள முடிவை மீள்பரிசீலனை செய்யுமாறு பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இருந்தபோதிலும், அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


ஐக்கிய நாடுகள் அமைப்பு, சர்வதேச இஸ்லாமிய அமைப்பு என பல அமைப்புகள் இது தொடர்பில் கோரியிருந்தன.


அத்துடன் உலக சுகாதார ஸ்தாபனம் இரு முறைகளுக்கும் அனுமதி அளித்திருந்தது. இது அடிப்படை மனித உரிமை மீறப்படுவது மாத்திரமின்றி இனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பும் இல்லாமல் செய்யும் செயல். மேலும் இனவாத நோக்கிலேயே இதற்கு எதிர்ப்பு வெளியிடப்படுகிறது. இறந்தவர்களின் உரிமையைப் பேண வேண்டும். மேலும் பல்வேறு பிசாசுகளை உருவாக்கி அச்சம் ஏற்படுத்துகின்றனர். இது தொடர்பான வர்த்தமானியை ரத்து செய்து விஞ்ஞானபூர்வமான முடிவு எடுக்குமாறு தாழ்மையாக கோருகிறோம்.


மேலும் நீர் ஊடாக கொரோனா பரவாது என உலக சுகாதார ஸ்தாபனம் தெளிவாக கூறியுள்ளது. பல்வேறு சர்வேச அமைப்புகளும் இது தொடர்பில் கோரிக்கை முன்வைத்துள்ளது.


$ads={2}


அதனால் ஒரு இனத்தின் மத கலாசாரத்தை பாதுகாப்பது முக்கியமான விடயமாகும். அதனால் தகனம் மாத்திரம் அனுமதித்து வெளியிட்டுள்ள வர்த்தமானியை மீள் பரிசீலனை செய்து விஞ்ஞான அடிப்படையில் தீர்மானம் மேற்கொள்ள வேண்டும் என மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவித்திருந்தார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.