இலங்கை பேஸ்புக் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை பேஸ்புக் பயனர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!!

இலங்கை பேஸ்புக் பயனாளர்களின் தனிநபர் தரவுக்காப்பு மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்வதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேஸ்புக் பயனாளர்களின் தரவுகளை காவல் துறையினரால் கூட இலகுவாக அணுக முடியாது என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளதாக ஆங்கில நாளிதழொன்று குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் பேஸ்புக் பயனாளர்களின் தரவுகளைக் கோரும் சட்டத் துறையினர் கடுமையான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

$ads={2}

பேஸ்புக் நிறுவனத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான பாதுகாப்பு கொள்கைக்கான தலைவர் Amber Hawkes இதனை கூறியுள்ளார்.

அடிப்படை பயனர் தரவு என அழைக்கப்படும் மிகவும் அடிப்படை மட்டத்திலான தரவுகளே தம்மிடம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பயனர்கள் எவரேனும் உள்ளூர் சட்டங்களை மீறியிருந்தால் அது தொடர்பிலான கோரிக்கையை சமர்ப்பிக்க முடியும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் இவ்வாறான கோரிக்கைகளை உள்ளூர் சட்டங்கள் குறித்து தெளிவுடைய தமது நிபுணர் குழு பரிசீலித்து தீர்மானிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.