திங்கள் முதல் அனைத்து பயணிகள் போக்குவரத்து சேவைகளும் வழமைக்கு - தொற்று ஏற்பட்டால் இழப்பீடும் வழங்கப்படும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

திங்கள் முதல் அனைத்து பயணிகள் போக்குவரத்து சேவைகளும் வழமைக்கு - தொற்று ஏற்பட்டால் இழப்பீடும் வழங்கப்படும்!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடு முழுவதும் பேருந்து சேவையை வழமையான முறையில் முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து சபை தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.


$ads={2}

மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்ல ஆரம்பித்துள்ளமையினால் பயணிக்கும் பேருந்துகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்பதனால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபை அறிமுகப்படுத்தியுள்ள கொவிட் 19 பாதுகாப்பு நிதியத்தின் மூலம் அரச பேரூந்தில் பயணிக்கும் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் 10,000 ரூபாவும் தொற்றினால் மரணமடைந்தால் 50,000 ரூபாவும் இழப்பீடாக வழங்குவதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்களில் பயணிக்கும் சகல பயணிகளிடமிருந்து அறவிடப்படும் பேரூந்து கட்டணத்திலிருந்து ஒரு ரூபா கொவிட் 19 பாதுகாப்பு நிதியத்துக்கு ஒதுக்கப்படவுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸில் பயணித்த பின்னர் நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், அவருக்கு கொவிட் 19 பாதுகாப்பு நிதியத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியிலிருந்து இழப்பீட்டை பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸில் பயணித்த பின்னர் கொரோனா தொற்றுடையவராக அடையாளங் காணப்படும் நபரொருவருக்கு இழப்பீடாக 10,000 ரூபாவும் தொற்றின் மூலம் மரணமடைந்தால் இழப்பீடாக 50,000 ரூபாவும் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இழப்பீட்டை பெற்றுக்கொள்வதற்கு பயணிகள் பஸ் கட்டணத்தை செலுத்திய பற்றுச்சீட்டை தம்வசம் வைத்திருப்பது அவசியமாகுமென்பதுடன் சபைக்குச் சொந்தமான பஸ்ஸில் பயணித்ததாலேயே கொவிட் தொற்று ஏற்பட்டதாக கொவிட் 19 தடுப்பு செயலணி, இ.போ.ச. சுகாதார அதிகாரிகள் மற்றும் வைத்தியர் உறுதிப்படுத்திய பின்னரே இழப்பீடு வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி போக்குவரத்துச் சேவைகள் இடம்பெற்று வருவதுடன் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்ஸில் பயணிப்பவர்கள் தொடர்பான விபரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் பயணிகள் பயணம் செய்த பஸ் தொடர்பான விபரங்களை இலகுவாக பெற்றுக்கொள்ளும் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே பயணிகள் தங்களுடைய விபரங்களை பயணிக்கும் பஸ்களில் கட்டாயம் பதிவு செய்வதுடன் பஸ் கட்டணம் செலுத்தியமைக்கான பற்றுச்சீட்டையும் தம்வசம் வைத்திருப்பதும் அவசியமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.



கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.