கண்டி பழைய போகம்பறை சிறைச்சாலையில் இருந்து நேற்றிரவு தப்பிச் சென்ற கைதி கண்டி நகரில் அலுவலகம் ஒன்றுக்கு அருகில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி பழைய போகம்பறை சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 05 கைதிகள் நேற்று (17) இரவு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர்.
$ads={2}
இதன்போது 03 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.
மேலும் ஒருவர் தப்பியோடியதையடுத்து அவரைக் கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இன்று பிற்பகல் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.