கொழும்பினை முழுமையாக முடக்க அவசியமில்லை! -இராணுவத் தளபதி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பினை முழுமையாக முடக்க அவசியமில்லை! -இராணுவத் தளபதி


கொழும்பை முடக்க வேண்டிய அவசியமில்லை என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


கொரோனா பரவலை தடுக்கும் செயலணி நாளாந்தம் உன்னிப்பாக அவதானித்து ஆராய்ந்து வருகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


கொழும்பு மாவட்டத்தில் ஏற்கனவே முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்தே கொரோனா வைரஸ் நோயாளிகள் அடையாளம் காணப்படுகின்றனர் என்றும் முடக்கப்படாத பகுதிகளில் இருந்து எவரும் அடையாளம் காணப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக மிகச்சிறந்த தந்திரோபாயத்தை நடைமுறைப்படுத்தி வருவதாகவும் அச்சுறுத்தல் நிலவும் பகுதிகளை தனிமைப்படுத்தி வருகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


$ads={2}


கொழும்பு கொரோனா மேலும் பரவலாக பரவுவதற்கான ஆபத்து மாவட்டமாக இருப்பதால், கொழும்பு மேயர் ரோஸி சேனாநாயக்க எதிர்வரும் மூன்று வாரங்களுக்கு முழுமையான முடக்க வேண்டும் என அண்மையில் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் விதமாகவே இராணுவத் தளபதி இன்று கருத்து வெளியிட்டிருந்தார்.


மேலும் கொழும்பு கொரோனா தீவிரமாக பரவும் வலயமாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ஏராளமான  தொற்றாளர்கள் தொடர்ந்து கண்டறியப்பட்டு வருவதாகவும் ரோஸி சேனாநாயக்க சுட்டிக்காட்டினார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.