பிணை முறி மோசடியுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக விசேட நீதிமன்றில் வழக்கு தாக்கல்! நீதியமைச்சர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிணை முறி மோசடியுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக விசேட நீதிமன்றில் வழக்கு தாக்கல்! நீதியமைச்சர்

இலங்கை மத்திய வங்கியில் நடந்த நிதி மோசடியுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக விசேட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக நீதியமைச்சர் அலி சப்ரி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர், இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி திருடர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் எனக் கூறிய போதிலும் இன்னும் வழக்கு தாக்கல் செய்யவில்லை என எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்திருந்தார்.

$ads={2}

இதற்கு பதிலளிக்கும் போதே நீதியமைச்சர் குறித்த விடயத்தை கூறியுள்ளார்.

இதன்போது நீதியமைச்சர் மேலும் கூறுகையில்,

மத்திய வங்கியின் திருடர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள போதிலும் பிரதான சந்தேகநபரான அர்ஜூன் மகேந்திரனுக்கு நீதிமன்ற அறிவிப்பாணையை வழங்க முடியாதுள்ளது என்பதால், வழக்கை முன்னெடுத்துச் செல்ல முடியாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.