பயங்கரவாதிகளின் தினங்களைக் கொண்டாடுவது சட்டப்படி குற்றம்! -அஜித் ரோஹன

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பயங்கரவாதிகளின் தினங்களைக் கொண்டாடுவது சட்டப்படி குற்றம்! -அஜித் ரோஹன

பயங்கரவாதிகளின் தினங்களைக் கொண்டாடுவது குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றச் செயற்பாடாகும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் 1999ஆம் ஆண்டிலேயே இந்த இரு தினங்களையும் மாவீரர் தினமாகப் பெயரிட்டிருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த தினத்தையே இவர்கள் இவ்வாறு கொண்டாட முயற்சித்து வருகின்றனர் என அவர் கூறியுள்ளார்.

$ads={2}

முல்லைத்தீவில் மாவீரர் நாள் நினைவுகூரலுக்கான தடையை நீக்கக் கோரி விண்ணப்பம் செய்தமையை சுட்டிக்காட்டியே அஜித் ரோஹன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுக்குப் புறம்பாக எவரேனும் செயற்பட்டால் அவர்களைக் கைதுசெய்து, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியும் என அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.