முரண்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு சவூதி அரேபியா பணியாளர்களை அனுப்பும் பணிகள் மீள் ஆரம்பம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முரண்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு சவூதி அரேபியா பணியாளர்களை அனுப்பும் பணிகள் மீள் ஆரம்பம்!


இலங்கையிலிருந்து சவூதி அரேபியாவிற்கு தொழில்வாய்ப்புக்கள் நிமிர்த்தம் பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கின்றது


கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 10 மாத காலமாக சவூதி அரேபியாவிற்கு பணியாளர்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டிருந்தது.


சவூதி அரேபியாவிற்கு பணியாளர்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட போதிலும், வெளிநாட்டு தொழில் வழங்குநர்கள் இடையில் காணப்பட்ட சில முரண்பாடுகள் காரணமாக பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.


இந்நிலையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவின் தலையீட்டில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முரண்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.


இதையடுத்து, சவூதி அரேபியாவிற்கு பணியாளர்களை அனுப்பும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவிக்கின்றது.


$ads={2}


இதன்படி, இலங்கையிலுள்ள ஆண் பணியாளர்கள் 60 பேர், சவூதி அரேபியா நோக்கி இன்று புறப்பட்டு சென்றுள்ளதாக பணியகத்தின் அதிகாரியொருவர் குறிப்பிடுகின்றார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.