
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி கல்கிசை விடுதியொன்றுக்கு சென்றிருப்பது குறித்த தகவல் ஒன்று சிங்கள ஊடகம் ஒன்று மூலம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதில் மேலும் குறிப்பிட்டிருந்ததாவது,
தனிமைப்படுத்தல் சட்டத்திட்டங்களுக்கு அமைய, விளக்கமறியலில் இருந்து பிணையில் வெளியே வரும் சந்தேகநபர், தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அதன் அறிக்கை வரும்வரை பொது இடங்களுக்கு செல்வது தவிர்க்கப்பட வேண்டும்.
இந்நிலையில், அண்மையில் பிணையில் விடுதலையாகிய நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன், அதற்கடுத்த தினமே கல்கிசையிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு சென்றிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இதன் உண்மை நிலையை ஆராயும்போது, நீதிமன்ற பிணை உத்தரவின் பின்னர் PCR பரிசோதனைக்கு ரிஷாட் பதியுதீன் உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதன் முடிவுகளின் அடிப்படையில் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே அங்கிருந்து, அரசாங்கம் தனிமைப்படுத்தல் நிலையமாக அறிவித்துள்ள கல்கிசை பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு மாற்றப்பட்டுள்ள ரிஷாட் பதியுதீன், தற்போது கட்டணம் செலுத்தி அந்த ஹோட்டலில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்.
$ads={2}
கடந்த 25ஆம் திகதி கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது முன்வைக்கப்பட்ட பிணைக் கோரிக்கைகளை ஏற்று ரிஷாட்டுக்கு பிணை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.