மஹர சிறைச்சாலையில் நேற்று இடம்பெற்றது கலவரம் அல்ல; திட்டிமிட்டு ஜனாதிபதியை அவமதிக்கும் செயல்! பாராளுமன்றில் அமைச்சர் விமல் தெரிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மஹர சிறைச்சாலையில் நேற்று இடம்பெற்றது கலவரம் அல்ல; திட்டிமிட்டு ஜனாதிபதியை அவமதிக்கும் செயல்! பாராளுமன்றில் அமைச்சர் விமல் தெரிவிப்பு!


மஹர சிறைச்சாலைக்குள் நடந்த சம்பவம் கொரோனா நோயாளிகளின் அதிகரிப்பு காரணமாக ஏற்பட்ட நெரிசலால் உருவாக்கப்படவில்லை எனவும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சர்வதேச ரீதியில் அவமதிப்பை ஏற்படுத்த ஒழுங்கமைக்கப்பட்ட சதி எனவும் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்தில் இன்று (30) உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,


இந்த சிறைச்சாலையின் நிலைமை காரணமாக நான் தனிப்பட்ட முறையில் குரல் கொடுக்கின்றேன். கொரோனா நோயாளிகளின் நெரிசலின் விளைவாக இந்த சம்பவம் நடக்கவில்லை.


சதுரங்க உள்ளிட்ட குழுவினர் மாத்திரைகளை விநியோகித்துள்ளனர். இந்த மாத்திரைகளை பயன்படுத்த போது ​​ஒருவரின் இரத்தத்தைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.


இந்த பரிசோதனையைச் செய்தபின், வெலிடை சிறைச்சாலையில் முடிந்தவரை மாத்திரையை விநியோகிக்கவும், ஒரு கொலைகார சூழ்நிலையை உருவாக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர்.


போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டிருந்த பலமிக்க கைதிகளால் சதுரங்க வழி நடத்தப்பட்டுள்ளார். புலனாய்வுப் பிரிவினர் இதைப் பற்றி அறிந்து கொண்டு சதுரங்க என்ற இந்த கைதியை வேறு சிறைக்கு மாற்றினர்.


இதில் சம்பந்தப்பட்ட ஒரு சில கைதிகளையும் மாற்றினர். இதனால் வெலிகடை சிறைச்சாலையில் இந்த சூழ்நிலையை உருவாக்க முடியவில்லை.


$ads={2}


துரதிஷ்டவசமாக, மஹர சிறைச்சாலையில் இந்த திட்டம் அரங்கேற்றப்பட்டுள்ளது. இது நெரிசலால் ஏற்படும் மன அழுத்தத்தின் காரணமாக ஏற்பட்டதாக கருத முடியாது. அப்படி நினைப்பது இலகுவானது.


இதனை நான் அறிந்ததால் கூறுகிறேன். இது திட்டமிட்ட செயல். கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது சிறையில் கொலைகள் நடந்தன.


அவர் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் இப்படியான சம்பவம் நடந்துள்ளது என சித்தரிக்கவும் இது நடத்தப்பட்டுள்ளது.


சர்வதேச ரீதியில் ஜனாதிபதிக்கு அவமதிப்பை ஏற்படுத்துவதே இதில் இருக்கும் உண்மையான கதை; அதனை விடுத்து கொரோனா நோயாளிகள் அதிகரித்ததால் இந்த சம்பவம் நடக்கவில்லை எனவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.