இன்று தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டவர்களின் முழு விபரம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இன்று தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டவர்களின் முழு விபரம்!


இன்றைய தினம் (24) நாட்டில் மேலும் 287 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.


அவர்கள் அனைவரும் நோயாளர்களுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 20,795 ஆக அதிகரித்துள்ளது.


அத்துடன் தற்போது 5,743 பேர் கொரோனா தொற்றுடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.


அதேநேரம் நாட்டில் தொற்றிலிருந்து இன்றைய தினம் மேலும் 465 நோயாளர்கள் குணமடைந்தனர்.


$ads={2}


இதற்கமைய 14,962 பேர் இதுவரையில் இந்த நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்து சிகிச்சை நிலையங்களில் இருந்து வெளியேறி இருப்பதாக தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.


இதேவேளை, பேருவளை பிரதேச சபையின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.


தார்கா நகரை சேர்ந்த அவர் உள்ளிட்ட மேலும் 83 பேருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தன.


தர்கா நகரை சேர்ந்த 2 பேருக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதியாகியிருந்த நிலையில் இந்த PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.


அந்த பரிசோதனைகளில் 38 பேரின் பெறுபேறுகள் வெளியாகியிருந்த நிலையில் அதில் குறித்த பிரதேச சபை உறுப்பினருக்கு தொற்று உறுதியாகியுள்ளமை தெரியவந்துள்ளது.


மேலும் இலங்கையில் இதுவரை 90 கொரோனா மரணங்கள் உத்தியோகபூர்வமாக பதிவாகியுள்ளன.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.