கொரொனா தொற்றால் மரணிப்போருக்கு குடும்பத்தினரே பொறுப்பு! இதுவே வழமை! -சுகாதார அமைச்சர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரொனா தொற்றால் மரணிப்போருக்கு குடும்பத்தினரே பொறுப்பு! இதுவே வழமை! -சுகாதார அமைச்சர்

கொரோனாவால் உயிரிழக்கும் நபர்களுக்கான பிரேதப் பெட்டிகளுக்கு பணம் செலுத்தப்பட வேண்டுமென சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி குறிப்பிட்டுள்ளார்.

வரவு செலவு திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தவர்களின் குடும்பங்கள் சவப்பெட்டிகளுக்கு பணம் செலுத்த வேண்டும்.

$ads={2}

கொரோனாவால் மரணமடைந்தவர்களின் குடும்பங்கள் தங்களது சொந்த செலவில் சவப்பெட்டிகளை வாங்க முடியும் அல்லது அதற்கு உரிய பணம் செலுத்த வேண்டும் என்பதும் சாதாரண நடைமுறை.

ஆயினும், ஒரு குடும்பம் சவப்பெட்டிகளை வாங்க அல்லது அதற்கு உரிய பணம் செலுத்த ஏதேனும் சிரமத்தை எதிர்கொண்டால், அரசாங்கம் அதனை பொறுப்பெடுக்கும்” என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி மேலும் குறிப்பிட்டார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.