வில்பத்து காடழிப்பு விவகாரம் தொடர்பில் நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பினை மையமாக வைத்து வில்பத்துவை சூழவுள்ள குடியிறுப்புக்களை அகற்ற வேண்டும் என பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வில்பத்து, கல்லாறு காடழிப்பு சட்டவிரோதம் எனவும் முழு பகுதியையும் வனப்பிரதேசமாக சொந்த நிதியில் மீளமைக்க வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் அங்கு குடியேற்றப்பட்டுள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என பாஹியங்கள ஆனந்த சாகர தேரர் கோரிக்கை விடுத்தார்.
$ads={2}
இன்று (16) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த கோரிக்கை முன்வைத்துள்ளார்.