யாழ். மூன்றாம் வருட பல்கலைக்கழக மாணவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

யாழ். மூன்றாம் வருட பல்கலைக்கழக மாணவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு!


யாழ். பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மூன்றாம் வருட மாணவர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


வடமராட்சி கிழக்கு, நாகர்கோயில் தெற்கை சொந்த இடமாகவும் துன்னாலை வடக்கை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரநாதன் இளங்குன்றன் எனும் மாணவனே இன்று (17) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


குறித்த மாணவன் கோப்பாய், வன்னியசிங்கம் வீதியில் வாடகை வீடொன்றில் தங்கி தமது பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கைகளைத் தொடர்ந்துள்ளார்.


$ads={2}


இந்நிலையில், குறித்த மாணவன் இன்று வகுப்புகளுக்குச் சமுகமளிக்காததால் அவருடைய நண்பர்கள் தொலைபேசியில் அழைப்பை மேற்கொண்டுள்ளனர். தொடர்சியாக அழைப்புகளை மேற்கொண்டபோதும் அவர் பதிலளிக்காததால் சந்தேகமடைந்த நண்பர்கள் அவர் தங்கியிருந்த இடத்துக்குச் சென்றுள்ளனர்.


அங்கு அவர் தங்கியிருந்த அறை பூட்டியவாறு காணப்படவே அவருடைய நண்பர்கள் கதவை உடைத்து உட்சென்று பார்த்தபோது குறித்த மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில சடலமாகக் காணப்பட்டுள்ளார்.


இது தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.