இனி யாசகர்களுக்கு பணம் வழங்கும் வாகன சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இனி யாசகர்களுக்கு பணம் வழங்கும் வாகன சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!


வீதி சமிக்ஞை விளக்குகளுக்கு அருகில் யாசகர்களுக்கு பணம் வழங்கும் வாகன சாரதிகளுக்கு எதிராக இனிவரும் காலங்களில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


வீதி சமிக்ஞை விளக்குகளில் பச்சை விளக்கு எரியும் போது யாசகர்களுக்கு பணத்தை வழங்குவது மற்றும் வீதி வியாபாரிகளிடம் பொருட்களை கொள்வனவு செய்யும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.


$ads={2}


அத்துடன் வீதி சமிக்ஞைகளுக்கு அருகில் யாசகம் பெறும் யாசகர்களுக்கு எதிராக தேசிய வீதிகள் சட்டத்தின் 50ஆவது ஷரத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.


கொழும்பு மற்றும் அதன் புறநகர் பிரதேசங்களில் உள்ள யாசகர்கள் உண்மையான யாசகர்கள் அல்ல. அவர்கள் இதனை தொழிலாக செய்து வருகின்றனர். யாசகர்களில் முதலாளிமாரும் இருக்கின்றனர்.


தொழிலாக யாசகம் பெறும் நபர்கள், சேகரிக்கப்படும் பணத்தை மாலை நேரங்களில் தமது முதலாளிகளிடம் வழங்குகின்றனர். அந்த பணத்தில் ஒரு பகுதி இவர்களுக்கு சம்பளமாக வழங்கப்படுவதாக தெரியவந்துள்ளது.


தொழிலாக யாசகம் பெறும் நடவடிக்கையில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.