கொரோனா தொற்று நோய் காரணமாக இலங்கையில் இருந்து வெளியேற முடியாதிருந்த 80 இலங்கையர்கள் அரசாங்கத்தின் விசேட அனுமதியுடன் இன்று (17) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், 41 இலங்கையர்களை ஏற்றிய விமானம் இன்று அதிகாலை அபுதாபி நோக்கி புறப்பட்டுச் சென்றது. மேலும் 39 இலங்கையர்களை ஏற்றிய மேலுமொரு விமானம் கட்டார் நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது.
$ads={2}
இதனிடையே வெளிநாடுகளின் சிக்கியிருந்த 92 இலங்கையர்கள் இன்று நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்.