கண்டி தேசிய வைத்தியசாலையில் மேலும் பலருக்கு கொரோனா! சிகிச்சை பிரிவு பூட்டு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கண்டி தேசிய வைத்தியசாலையில் மேலும் பலருக்கு கொரோனா! சிகிச்சை பிரிவு பூட்டு!


கண்டி தேசிய மருத்துவமனையில் மேலும் 08 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.


தொண்டை, காது மற்றும் மூக்கு சிகிச்சைப் பிரிவின் மருத்துவர் ஒருவரும், ஏழுதாதியர்களும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என கண்டி மருத்துவமனை பதில் பணிப்பாளர் மருத்துவர் ஈரேஷா பெர்னாண்டோ தெரிவித்தார்.


அதன்படி, கண்டி தேசிய மருத்துவமனையில் 18 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். இந்த மாதம் 26ஆம் திகதி கண்டி மருத்துவமனையின் ஊழியர்களுக்கு நடத்திய PCR பரிசோதனையின் போது தொண்டை, காது மற்றும் மூக்கு சிகிச்சை பிரிவின் இரண்டு தாதியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.


$ads={2}


அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் அந்தப் பிரிவில் பணியாற்றியவர்கள் அனைவரும் இன்று PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.


இதையடுத்து, கண்டி தேசிய மருத்துவமனையின் தொண்டை, காது மற்றும் மூக்கு சிகிச்சைப் பிரிவு மூடப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.