ஆசிரியரின் உறவுகளுக்கு கொரோனா - மாணவர்கள் தனிமைபடுத்தலில்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆசிரியரின் உறவுகளுக்கு கொரோனா - மாணவர்கள் தனிமைபடுத்தலில்

தென்னிலங்கையில் பாடசாலை ஆசிரியர் ஒருவரின் உறவினர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹிக்கடுவ, சீனிகம, ஸ்ரீ விமலபுத்தி மகா வித்தியாலயத்தில் கற்பிக்கும் ஆசிரியரின் குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அம்பலங்கொட பிரதேசத்தில் இருந்து வருகைதந்த ஆசிரியரின் உறவினர்களுக்கு கொரோனா தொற்றியமை பீசீஆர் பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.


$ads={2}இதன் காரணமாக குறித்த ஆசிரியருடன் தொடர்பில் இருந்த 3 ஆசிரியர்களும் 9 மாணவர்களும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஹிக்கடுவ பொது சுகாதார பரிசோதகர்கள் அந்த பாடசாலைக்கு கிருமி நீக்கம் செய்யும் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

நேற்று பாடசாலைக்கு வருகைதந்த 7 மாணவர்கள் மீண்டும் வீட்டிற்கு அனுப்புவதற்கு பெற்றோர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

எனினும் இன்றைய தினம் வழமையைப் போன்று கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என குறித்த பாடசாலையின் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.