உயிரிழந்த நபரை போலியான முறையில் அடக்கம்; எழுந்துள்ள சர்ச்சை!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உயிரிழந்த நபரை போலியான முறையில் அடக்கம்; எழுந்துள்ள சர்ச்சை!!

கொழும்பு மாவட்டத்திற்குட்பட்ட வெல்லம்பிட்டியில் உயிரிழந்த நபரை போலியான முறையில் அடக்கம் செய்தமை தொடர்பில் சர்சை எழுந்துள்ளது.

நேற்று முன்தினம் வீட்டில் திடீரென உயிரிழந்த நபரின் உடலுக்கு போலிச் சான்றிதழ் சமர்ப்பித்து விட்டு அடக்கம் செய்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வெல்லம்பிட்டிய குமாரதாஸ பிரதேசத்தை சேர்ந்த 64 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயரிழந்துள்ளார்.

அன்றைய தினமே குறித்த நபரின் குடும்பத்தினரால் அந்த நபரின் உடலுக்கு போலியான மரண சான்றிதழ் ஒன்று சமர்ப்பித்து தெமட்டகொட மயானத்தில் அடக்கம் செய்துள்ளளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

$ads={2}

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒருவர் வீட்டில் உயிரிழந்தால் சுகாதார பிரிவு மற்றும் பொலிஸாருக்கு தெரியப்படுத்த வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

வீட்டில் இருந்த மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நபரின் உடலை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கியவர்கள் தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.