நேற்று முன்தினம் வீட்டில் திடீரென உயிரிழந்த நபரின் உடலுக்கு போலிச் சான்றிதழ் சமர்ப்பித்து விட்டு அடக்கம் செய்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வெல்லம்பிட்டிய குமாரதாஸ பிரதேசத்தை சேர்ந்த 64 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயரிழந்துள்ளார்.
அன்றைய தினமே குறித்த நபரின் குடும்பத்தினரால் அந்த நபரின் உடலுக்கு போலியான மரண சான்றிதழ் ஒன்று சமர்ப்பித்து தெமட்டகொட மயானத்தில் அடக்கம் செய்துள்ளளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒருவர் வீட்டில் உயிரிழந்தால் சுகாதார பிரிவு மற்றும் பொலிஸாருக்கு தெரியப்படுத்த வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
வீட்டில் இருந்த மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நபரின் உடலை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கியவர்கள் தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.