அக்கரைபற்றில் பலருக்கு கொரோனா உறுதி - பல பிரதேசங்கள் முடக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அக்கரைபற்றில் பலருக்கு கொரோனா உறுதி - பல பிரதேசங்கள் முடக்கம்!

அம்பாறை – அக்கரைப்பற்று பிரதேசத்தில் 10 பேருக்கு கொரோனோ வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, பல பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதற்கமைய அக்கரைப்பற்று சுகாதார பிரிவிலுள்ள பிரதேசங்கள் இன்று (வியாழக்கிழமை) காலையில் இருந்து மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)


$ads={2}


குறித்த பிரதேசத்திலுள்ள மீன் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபட்ட 20 பேருக்கு நேற்று எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பிரிசோதனையிலேயே 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து அவர்கள் அனைவரும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கப்படும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.

அத்துடன், அந்த சுகாதார பிரிவிலுள்ள பிரதேசங்கள் இன்றிலிருந்து மறு அறிவித்தல் வரும்வரை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.