முகக்கவசம் அணியாமல் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கிய கொரோனா தொற்றுக்குள்ளான மருத்துவர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முகக்கவசம் அணியாமல் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கிய கொரோனா தொற்றுக்குள்ளான மருத்துவர்!

கேகாலை மாவட்டத்தில் ருவன்வெல்ல பிரதேசத்தில் அங்கருவெல்ல பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் மருத்துவ சிகிச்சை மையத்தை நடத்தி வந்த மருத்துவர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அங்குருவெல்ல பகுதியில் பிரசித்தி பெற்ற ஆயுர்வேத மருத்துவரான இவர், தினமும் 100-150 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறார்.


$ads={2}


குறித்த மருத்துவரும் அவரது மனைவியும் கடந்த 26 ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டனர், நேற்று பெறப்பட்ட முடிவுகளின்படி, இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொண்ட போதிலும் இந்த மருத்துவர் நேற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததாக அப்பகுதியில் உள்ள சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிகிச்சை மையத்தில் சிகிச்சையின் போது மருத்துவர் முகக்கவசங்களை அணியவில்லை என்றும், நோயாளிகளுக்கு கைகளை சுத்தம் செய்ய தண்ணீர் அல்லது கை சுத்திகரிப்பாண்கள் வழங்கவில்லை என்றும், குறைந்தபட்சம் தனிப்பட்ட தூரத்தை பராமரிக்க தவறியதாகவும் சுகாதார அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.

கடந்த 14 நாட்களில் இந்த மருத்துவரால் சிகிச்சையளிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளும் அவரது முதல் தொடர்பாளர்களாக கருதப்படுகிறார்கள், மேலும் அந்த நாட்களில் 1000-1500 பேர் வரை அவரிடமிருந்து சிகிச்சை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, கொட்டியகும்புர, புலத்கொஹுபிட்டி, ருவன்வெல்ல, கலபிடமட மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்தகளில் எவறாயினும் இம் மருத்துவரிடம் சிகிச்சை பெற வந்திருந்தால், ருவன்வெல்ல சுகாதார அதிகாரிகள், தங்கள் பகுதியின் கிராம உத்தியோகத்தர், பொது சுகாதார ஆய்வாளர் அல்லது உள்ளூர் சுகாதார அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.