20ஆம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்டுள்ள நாடாளுமன்றப் பேரவை முதல் தடவையாக இன்றைய தினம் (04) கூடவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவின் தலைமையில் இந்த அமர்வுகள் இன்றைய தினம் பிற்பகல் 4.00 மணியளவில் நடைபெறவுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பிரதமரினால் பரிந்துரை செய்யப்பட்ட பிரதிநிதி டக்ளஸ் தேவானந்தா, எதிர்க்கட்சித் தலைவரினால் பரிந்துரை செய்யப்பட்ட பிரதிநிதி லக்ஷமன் கிரியல்ல ஆகியோரும் இன்றைய முதல் அமர்வில் பங்கேற்கவுள்ளனர்.
$ads={2}
உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் நியமனங்கள் குறித்து இதில் கலந்துரையாடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
நாடாளுமன்றின் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.