நாட்டில் அனைத்து பள்ளிவாயல்களுக்குமான அவசர வேண்டுகோள்! -முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் அனைத்து பள்ளிவாயல்களுக்குமான அவசர வேண்டுகோள்! -முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்

சுகாதர அமைச்சினால் வெளியிடப்பட்ட கொவிட்-19 வழிகாட்டல்களுக்கு அமைவாக மத வழிபாட்டுத்த தளங்களில் அதிக பட்ச நபர்களுக்கு தடை விதிக்கப்பட்டதை கருத்திற் கொண்டு இலங்கை வக்பு சபையினால் பின்வரும் நடைமுறைகளை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளது.

1. எல்லா பள்ளிவாசல்களிலும் எந்த நேரத்திலும் அதிக பட்சம் 25 நபர்களை மாத்திரமே அனுமதித்தல்.

2. அவ்வாறு 25 நபர்களை தேர்ந்தெடுக்கும் முறை ஜமாத்தினருக்கு முன்னரே அறிவிக்கப்பட வேண்டும்.

3. ஏனைய அனைத்து சுகாதாரக மற்றும் பாதுகாப்பு துறையினரால் விதிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் இலங்கை வக்பு சபையின் பணிப்புரைகள் மிக கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.

$ads={2}

4. மேல்மாகாணத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களும், தனிமைப்படுத்தப்பட்ட அல்லது வரையறுக்கப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களும் இலங்கை வக்பு சபையின் மறு அறிவித்தல் வரை மூடப்படல் வேண்டும்.

5. மேற்கூறப்பட்ட வரையரைகளை கண்டிப்பாக பேணுவது சிரமம் அல்லது முடியாது எனக் கருதுகின்ற பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள்க அல்லது பொறுப்பாளர்கள் மறுஅறிவித்தல் வரை தமது தற்துணிவின் பேரில் பள்ளிவாசல்களை மூடுவதற்கு முடியும்.

இலங்கை வக்பு சபையின் பணிப்புரைக்கமைய,
ஏ.பீ.எம். அஷ்ரப்
பணிப்பாளர்
வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.