கொரோனா : அக்குரணையில் இரு பகுதிகளுக்கு பூட்டு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா : அக்குரணையில் இரு பகுதிகளுக்கு பூட்டு!

அக்குறணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட இரண்டு கிராம அதிகாரிகள் பிரிவுகளுக்கு, இன்று (24) முதல், போக்குவரத்துக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என, சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

அக்குறணையில், சமீபத்தில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள் காரணமாகவே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.


$ads={2}


இதன்பிரகாரம், அக்குறணை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட புளுகொஹொதென்னை பிரதேசத்தில் ஒரு பகுதியிலும், தெழும்புகஹவத்தை ஆகிய கிராம அதிகாரி பிரிவுகளுக்கு நேற்று முதல் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்றும் இப்பிரதேசத்தில் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு, மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றும் அக்குறணை பிரதேச செயலாளர் இநதிகா குமாரி அபேசிங்ஹ தெரிவித்தார்.

அத்துடன், இந்தக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வாழும்மக்கள் சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரிவினரின் ஆலோசனைகளைப் பின்பற்றி நடந்துகொள்ளுமாறும் இப்பகுதிகளில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

மடவளை நியூஸ்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.