கம்பஹா மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கம்பஹா மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்!

கம்பஹா மாவட்டத்தின் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் ஓய்வூதிப் பணத்தைப் பெற்றுக் கொள்வதற்கு நாளை (10) முதல் மூன்று நாட்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.

இதன்படி, இந்த மாதத்திற்கான ஓய்வூதியப் பணத்தைப் பெற்றுக் கொள்வதற்கு, நாளையும், எதிர்வரும் 11 மற்றும் 12 ஆம் திகதிகளிலும் அனுமதி வழங்குமாறு, கம்பஹா மாவட்ட செயலாளர் அலுவலகம் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

$ads={2}

கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத், மேல் மாகாணத்துக் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஓய்வூதியப் பண அட்டை அல்லது தேசிய அடையாள அட்டையை, ஊரடங்கு அனுமதிப் பத்திரமாக பயன்படுத்த அனுமதி வழங்குமாறு கம்பஹா மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத் கேட்டுக் கொண்டுள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.