கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு இறக்கும் முஸ்லிம்களை நல்லடக்கம் செய்ய முடியாத காரணமாக இலங்கையில் நிலத்தடி நீர் மட்டம் குறைவாக உள்ள காரணம் என்றால், இலங்கையை விட நிலத்தடி நீர் மட்டம் மிகக் குறைவாக உள்ள நாடுகளில் இவ்வாறான கொரோனா தொற்றில் பலியானவர்கள் புதைக்கப்படுவது நாம் எல்லோரும் அறிந்ததே என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தனது முகநூல் கணக்கில் பதிவொன்றை இட்டிருந்தார்.
$ads={2}
மேலும், ரஷ்யா, புருனே, அர்ஜென்டினா, நெதர்லாந்து மற்றும் கனடா போன்ற விட நிலத்தடி நீர் மட்டம் மிகக் குறைவாக உள்ள நாடுகளும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களை அடக்கம் செய்கின்றன என மேலும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இது தொடர்பாக உலகப் புகழ்பெற்ற பத்திரிகையும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.