ஈஸ்டர் தற்கொலைதாரியின் திருமண சாட்சியத்தில் ரிஷாத்தின் கையொப்பம்! - இதனை தானே ஒப்புக் கொண்ட ரிஷாத்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஈஸ்டர் தற்கொலைதாரியின் திருமண சாட்சியத்தில் ரிஷாத்தின் கையொப்பம்! - இதனை தானே ஒப்புக் கொண்ட ரிஷாத்!

ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் குண்டுத் தாக்குதல்களை நடத்திய தீவிரவாதிகளில் ஒருவரான இன்ஸாப் அஹமட்டின் திருணத்திற்கு ரிஸாட் பதியூதின் சாட்சிக் கையெழுத்திட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இந்த தகவலை நேற்று நடைபெற்ற விசாரணையில் ஜனாதிபதி ஆணைக்குழு முன் அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.


$ads={2}


கொழும்பு மகஸின் சிறையில் இருந்தவாறு ஸ்கைப் தொழில்நுட்பம் ஊடாக ஜனாதிபதி ஆணைக்குழு முன் முன்னாள் அமைச்சர் ரிஸாட் பதியூதீன் சாட்சியமளித்தபோது கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.

எனினும் பலதடவை இன்ஸாப் தனது தொலைபேசிக்கு அழைப்பு எடுத்திருந்தாலும் தான் அவர் தற்கொலை குண்டுதாரியாக மாறிவிடுவார் என நினைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தெஹிவளையில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரை விடுவிக்க அப்போதைய இராணுவத் தளபதி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்கவுக்கு தொலைபேசியில் அழுத்தம் கொடுத்ததாக சொல்லப்படும் குற்றச்சாட்டையும் தாம் நிராகரிப்பதாக ரிஸாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.