சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெற புதிய வயதெல்லை நிர்ணயம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெற புதிய வயதெல்லை நிர்ணயம்!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கு பெறும் வீரர்கள் குறைந்தபட்சம் 15 வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்ற புதிய விதிமுறையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அமைப்பு அமல்படுத்தியுள்ளது.

சமீபத்தில் இடம்பெற்ற ICC கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மகளிர் ICC போட்டிகள், இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்கள், U-19 போட்டிகள் என அனைத்திலும் பங்குபெற ஒரு வீரர் குறைந்தபட்சம் 15 வயதை எட்டியிருக்க வேண்டும் என ICC உத்தரவு பிறப்பித்துள்ளது.

இளம் வீரர்களின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

$ads={2}

அதேசமயம் ஓர் அணி நினைத்தால் எந்த வயதிலும் ஓர் வீரரை அறிமுகப்படுத்த முடியும். அதற்கு ICCயிடம் அந்த அணி அனுமதி பெறவேண்டும். அசாதாரணமான சூழலில் 15 வயதுக்குட்பட்ட வீரரை அணியில் சேர்க்க வேண்டும் என்றால் ICCயிடம் விண்ணபிக்க வேண்டும்.

குறித்த வீரரின் அனுபவம், மனநிலை, சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கான தகுதி போன்றவற்றை ICCக்குத் தெரிவிக்க வேண்டும் என்று புதிய விதிமுறையில் கூறப்பட்டுள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.