இலங்கை வந்த பிக்பாஸ் புகழ் லொஸ்லியா திடீரென மயங்கி விழுந்துள்ளார்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை வந்த பிக்பாஸ் புகழ் லொஸ்லியா திடீரென மயங்கி விழுந்துள்ளார்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் மனதை கவர்ந்தவர் லாஸ்லியா. அந்நிகழ்ச்சி முடித்தபின் விளம்பரங்கள் நடிப்பது, படங்கள் கமிட்டாகி நடிப்பது என பிஸியாக உள்ளார்.

இந்த நிலையில் லாஸ்லியாவின் தந்தை கடந்த வாரம் மாரடைப்பால் கனடாவில் திடீர் என உயிரிழந்துள்ளார், இந்த செய்தி மக்களுக்கு மிகவும் அதிர்ச்சியை தந்துள்ளது.

இந்நிலையில் லொஸ்லியாவின் தந்தை மரியநேசனின் மரணத்திற்கான காரணம் என்ன என்பதற்கான சான்றிதழை அந்நாட்டு அரசு வழங்கியுள்ள நிலையில் அவரது சடலத்தை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


$ads={2}

தற்போது லொஸ்லியா இலங்கை வந்தடைந்துள்ள நிலையில் விடுதியொன்றில் தனிமைப்படுத்தலில் இருக்கின்றார்.

இந்நிலையில் இன்றையதினம் (23) அவர் மயங்கி விழுந்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.

தந்தையிறந்த சோகத்தில் தொடர்ந்து மன அழுத்தத்திற்குள்ளாகி சரியாக சாப்பிடாமல், இருந்ததால் பலவீனம் அடைந்து இவ்வாறு மயக்கமடைந்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

இந்த சம்பவங்கள் தொடர்பில் உத்தியோகப்பூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.