ஆஸ்திரியாவின் பயங்கரவாத தாக்குதல்; அனைத்து பள்ளிவாயல்களும் பூட்டு!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆஸ்திரியாவின் பயங்கரவாத தாக்குதல்; அனைத்து பள்ளிவாயல்களும் பூட்டு!!

ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் கடந்த நவம்பர் 02 ஆம் திகதி நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலை தொடர்ந்து வியன்னாவில் உள்ள பள்ளிவாயல்களும் தற்காலிகமாக மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.


ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவில் 6 வெவ்வேறு பகுதிகளில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 04 பேர் பலியாகினர்; மேலும் 14 பேர் காயமடைந்தனர். இந்த பயங்கரவாத சம்பவம் உலகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளைக் கிளப்பியது.


இந்நிலையில், ஆஸ்திரிய உள்துறை அமைச்சர் கார்ல் நெஹம்மர் வியன்னாவில் உள்ள தெஹிட் பள்ளிவாயல் மற்றும் மெலிட் இப்ராஹிம் இஸ்லாமிய சங்கத்தையும் மூடுவதற்கான அறிவிப்பை நேற்று (06) வெளியிட்டார்.


$ads={2}


தேசியப் பாதுகாப்பு காரணமாகவே பள்ளிவாயல்கள் மூடப்படுவதாகவும், அரசின் இந்த நடவடிக்கையை இஸ்லாமியர்களுக்கு எதிரானதாக கருத தேவையில்லை எனவும் கார்ல் தெரிவித்தார்.


வியன்னா தாக்குதல் சம்பவத்தையொட்டி வியன்னா உளவுத்துறை மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பின் தலைவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவும் அவர் அறிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.