
நல்லாட்சியின் காலகட்டத்தில் ரூ .63 பில்லியன் மதிப்புள்ள செம்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக இன்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஈஸ்டர் தாக்குதலின் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான இன்சாப் அஹமத்துக்கு டெண்டர் ஒப்பந்த செயல்முறைக்கு அப்பால் பாரிய ஒரு செம்பு தொகை ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க நிதியமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் நேற்று (27) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
குறித்த செம்புத் தொகையை மீண்டும் ஏற்றுமதி செய்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர் முகமது முஸம்மில் எழுப்பியகேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.