இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 137 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, இன்றைய தினம் தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 409 ஆக பதிவாகியது.
தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 05 பேரும் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பை பேணிய 132 பேருமே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும் இராணுவ தளபதி மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டில் தொற்று உறுதியான மேலும் 332 பேர் குணமடைந்துள்ளனர்.
$ads={2}
அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,581 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், தொற்று உறுதியான 6,140 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.