ஏற்கனவே நாடு 13 ட்ரில்லியன் ரூபாய் கடன்களில் உள்ள நிலையில் மேலும் ஐந்து ட்ரில்லியன் சேர்கின்றது என மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நேற்று (17) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட நிலையில் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நாடாக முகங்கொடுக்க நேர்ந்துள்ள பொருளாதார நெருக்கடிக்கும், கொரொனா வைரஸ் நெருக்கடிக்கும் முகங்கொடுக்கக்கூடிய விதத்தில் இந்த வரவு செலவுச் திட்டம் அமையவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வழமை போன்றே கடன்களை பெற்றுக்கொண்டு செலவுசெய்யும் வரவு செலவுத் திட்டமாகவே இது அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.