கண்டி பழைய போகம்பர சிறைச்சாலையில் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டிருந்த 07 சிறைக் கைதிகள் கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
$ads={2}
கைதிகள் நேற்று வெலிகந்தவில் அமைந்துள்ள கொரோனா மருத்துவ மையத்திற்கு மாற்றப்பட்டனர்.
மேலும், வெலிகடை சிறைச்சாலையில் 300 கைதிகளின் பி.சி.ஆர் முடிவுகளில் இருந்து, அவர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.