சுகாதார அமைச்சின் செயலாளர் இதனை உறுதிப்படுத்தினார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டோர் ஊரடங்கு மற்றும் முடக்கல் நிலைகளின் போது வீடுகளில் தங்கியிருக்காது தேவையான போது மருத்துவ சிகிச்சை பெற வேண்டும்.
இலங்கையில் ஒரு சிறந்த சுகாதார சேவையுள்ளது. இதனை யாரும் மறுக்கவோ அல்லது மருத்துவ சிகிச்சை பெறுவதைத் தவிர்க்கவோ கூடாது.
முடக்கல் நிலையில் இருக்கும் போதுகூட அவசர மருத்துவ சேவைகள் தேவைப்படுவோர் அம்புலன்ஸில் மருத்துவமனைகளுக்கு வரக்கூடிய ஒரு பொறிமுறையை நாங்கள் நிறுவியுள்ளோம்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அனைவருமே இறந்துவிடமாட்டார்கள் என்பதை பொதுமக்கள் நினைவில் கொள்ள வேண்டும். கொரோனா வைரஸூக்கு நேர்மறை சோதனை செய்யப்பட்டவர்களில், 0.2 சதவீதம் பேர் உயிரிழந்தனர் என குறிப்பிட்டுள்ளார்.