மாடறுப்பு தடை அமுலுக்கு வந்தவுடன் ஏனைய விலங்குகளுக்கும் தடை விதிக்க வேண்டும்! -ஓமல்பே சோபித்த தேரர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மாடறுப்பு தடை அமுலுக்கு வந்தவுடன் ஏனைய விலங்குகளுக்கும் தடை விதிக்க வேண்டும்! -ஓமல்பே சோபித்த தேரர்

நாட்டின் மீது அக்கறைக் கொண்ட தலைவர் ஒருவர் செய்ய வேண்டியது அதிகாரங்களை களை தன்வசப்படுத்திக் கொள்வதல்ல, மாறாக நாட்டு மக்களுக்கான நலனைப் பெற்றுக் கொடுப்பதே என விலங்குகள் மற்றும் இயற்கைக்கான நீதி அமைப்பின் தலைவர் ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்தார்.


இறைச்சிக்காக மாடுகளை அறுப்பதை தடை செய்வது தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், அவ்வாறு நிறைவேற்றும் வரையில் மக்கள் போராட்டங்களை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.


நாரஹேன்பிட்டி - ஸ்ரீ சங்கா விகாரை மண்டபத்தில் இன்று (04) விலங்குகள் மற்றும் இயற்கைக்கான நீதி அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட கலந்துரையாடலில் கலந்துக் கொண்டிருந்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


இதன்போது அவர் மேலும் கூறியதாவது,


உயிரினங்களை வதைப்பதை அனைத்து மதங்களிலும் ஒரு பாவச்செயல் என்றே கூறுகின்றன. இந்நிலையில் இறைச்சிக்காக மாடுகளை அறுப்பதை தடை செய்ய வேண்டும் என்பது தொடர்ச்சியாக பேசப்பட்டு வரும் விடயமாகும். அதற்கமைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு மாடுகளை அறுப்பதை தடைச் செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.


இதன்போது ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் அனைவரும் எந்த இன, மத பேதமுமின்றி அதனை ஆதரித்திருந்தனர். ஆனால், இந்த தீர்மானமானது உடனே நிறைவேற்றப்படாமல் ஒரு மாதத்திற்கு பிற்போடப்பட்டது. இதற்கு பிரதான காரணம் இவ்வாறு இறைச்சிக்காக மாடுகளை வெட்டும் வர்த்தகர்களினால் முன்னெடுக்கப்பட்ட அழுத்தமாகும்.


தற்போது இந்த தீர்மானம் தொடர்பில் அமைச்சரவையும் அங்கிகாரம் வழங்கியுள்ளது. அதனால் மேலும் காலங்கடத்தாமல் அதனை உடனே அமுலுக்கு கொண்டுவர வேண்டும். 


இந்நிலையில், சிலர் மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவது பாவச் செயல் என்றால், ஏனைய விலங்குகளை உணவுக்காக பயன்படுத்துவது பாவச்செயல் இல்லையா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுவும் பாவச்செயல் தான். ஆனால், முதலில் நாம் மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவதை தடுத்துவிட்டு, அதிலிருந்து ஏனைய விலங்குகளையும் இறைச்சிக்காக வெட்டுவதை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். 


முதலில் இந்த தீர்மானமானது ஒரு இனத்தையோ, மதத்தையோ இலக்கு வைத்து எடுக்கப்பட்டதல்ல என்பதை கவனத்திற்கொள்ளவேண்டும் எனத் தெரிவித்தார்.


$ads={2}


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.