மஹரகமவில் அமைந்துள்ள தேசிய கல்வி நிறுவகம் தனது சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்திக் கொண்டுள்ளது.
கொரோனா நோய்த் தொற்று அபாயம் காரணமாக இவ்வாறு சேவைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளது.
மேலும் இவர்களிடத்தில் ஏதேனும் சேவையை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் 011-7601601 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தங்களது தேவையை குறிப்பிட முடியும் என தேசிய கல்வி நிறுவகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் ஏனைய பயன் பெறுனர்கள் தேசிய கல்வி நிறுவகத்தின் இணையதளம் மற்றும் யூடியுப் செனலின் ஊடாக தகவல்களைப் பெற்றுக்கொண்டு பயன் அடைய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
$ads={2}