BREAKING: பிரபல போதைப் பொருள் வர்த்தகர் துப்பாக்கிச் சூட்டில் பலி!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

BREAKING: பிரபல போதைப் பொருள் வர்த்தகர் துப்பாக்கிச் சூட்டில் பலி!!

பிரபல போதைப் பொருள் வர்த்தகர் மாகந்துர மதூஷ் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

மாளிகாவத்தை வீட்டுத் தொகுதியில் 22 கிலோகிராம் ஹெரோயின் இருப்பதாக தெரியவந்ததை அடுத்து இன்று (20) அதிகாலை கைதியான மதூஷை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் அந்த இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

$ads={2}

இதன்போது அங்கிருந்த போதைப்பொருள் வர்த்தகர்கள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

இதனை அடுத்து அவர்களுடன் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் மாகந்துர மதூஷ் மற்றும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரி ஒருவர் மீது தோட்டாக்கள் பாய்ந்துள்ளன.

சம்பவத்தில் மாகந்துர மதூஷ் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குறித்த ஸ்தலத்தில் ரூ .22 கோடி மதிப்புள்ள 22 கிலோகிராம் போதைப்பொருள், இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

ஏறக்குறைய 18 மாதங்களாக சிஐடியின் தடுப்புக் காவலில் இருந்த மாகந்துர மதூஷ், மேலதிக விசாரணைகளுக்காக கடந்த வெள்ளிக்கிழமை (16) கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவுக்கு ஒப்படைக்கப்பட்டார்.

இதையடுத்து, மாகந்துர மதூஷ் அளித்த தகவல்களின்படி, கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பில் கொடிகாவத்தை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிலோ ஹெராயின் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.