இலங்கையில் மேலும் 92 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
இவ்வாறு வைரஸ் தொற்று உறுதியான அனைவரும் பேலியகொட மீன் சந்தையில் தொற்றுக்கு உள்ளவர்களோடு நெருக்கமானவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம் இதுவரையில் 368 தொற்றாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.