ஐந்து மாடி கட்டிடத்திலிருந்து கீழே தள்ளிவிடப்பட்ட இளைஞன் பலி! கொழும்பில் சம்பவம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஐந்து மாடி கட்டிடத்திலிருந்து கீழே தள்ளிவிடப்பட்ட இளைஞன் பலி! கொழும்பில் சம்பவம்!


கொழும்பு – கொள்ளுப்பிட்டியின் ஐந்து மாடிக்கட்டடம் ஒன்றில் 27 வயதான ஒருவர் தாக்கப்பட்டு கீழே தள்ளிவிடப்பட்ட இளைஞன் உயிரிழந்துள்ளளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த செப்டம்பர் 28ஆம் திகதியன்று இடம்பெற்றதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட நால்வரும் நேற்று கோட்டை நீதிவான் நீதிமன்றில் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டனர்.

குறித்த நால்வரில் ஒருவரிடம் இருந்து இறந்து போனவரின் கையடக்க தொலைபேசி மற்றும் அவரை குத்திய கத்தி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் கடவத்த, பசறை, அஹன்கம மற்றும் களனியைச் சேர்ந்தவர்களாவர் என தெரியவருகிறது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.