![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi2BO7hX5MDqRXj7PztBUEKe-oG9mUeNGcYkM4FqOAmEwcNXCJUJvsupQ3TNB6_eWqQntFKUoqkhM8o_zVizfophtizuQnIJQod2ZAiDze3zK3ilf_ZxT1Kdx0lj4VMnYueTGrk-Jc9hHo/s16000/CF1E5AB3-3E36-4839-902F-76EAFAB2E7B0.jpeg)
வீதி ஒழுங்கு விதிகளை மீறும் சாரதிகளை அடையாளம் காண்பதற்கு விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி விமானப்படையின் ட்ரோன் கருவிகள் மூலம் சாரதிகளை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இந்த நடவடிக்கை எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் செயற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.