கொழும்பில் கொரோனா அதிகம் பரவும் அபாயம் - சுகாதார அமைச்சு

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பில் கொரோனா அதிகம் பரவும் அபாயம் - சுகாதார அமைச்சு


மினுவாங்கொட தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய தொற்றாளர்கள் 160 பேர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் ஜயருவன் பண்டார தெரிவித்துள்ளார்.

குறித்த நோயாளர்களுடன் நெருக்கமாக செயற்பட்டவர்கள் மற்றும் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புடையவர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மினுவாங்கொட கொத்தணியை கட்டுப்படுத்த கூடிய நிலையில் உள்ளது. எனினும் கொழும்பு மாவட்டத்தில் அதிக மக்கள் உள்ளமை, சிறிய இடத்தினுள் பாரிய அளவிலான மக்கள் வாழ்கின்றமை மற்றும் நகர சூழல் ஆகிய விடயங்கள் காரணமாக ஆபத்துக்கள் உள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் தொற்றாளர்கள் மேலும் அடையாளம் காணப்பட்டால், தொடர்ந்து பரவும் ஆபத்து அதிகமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்படும் எண்ணிக்கை மேலும் அதிகரித்தால் எதிர்வரும் நாட்களில் சிரமமான நிலை ஏற்பட கூடும் என அவர் கூறியுள்ளார்.

சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.